விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

முகப்பு / தமிழ்நாடு / ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் தெரிவித்தார் ஜெயலலிதா - சீமான்

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும் அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன். விளம்பரம் என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள் ஜெயலலிதா.

  • 1-MIN READ News18
  • Last Updated :

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும் அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

விளம்பரம்

என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள் ஜெயலலிதா. ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் சீமான் கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார் ஜெயலலிதா. இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேட்டுப்பாளையத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல செல்கிறோம்.உயிரிழந்தவர்களின்  குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை தந்தால் பாதுகாப்பாக இருக்கும். பணம் தருவது தற்காலிக இழப்பீடாக தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்தார்.

Also see…

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்...
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்